பொங்கல் விழா மற்றும் “எனது 1வது பாடசாலை நாள்” நிகழ்வு – ஓமந்தை முன்பள்ளி

எமது பிரதேச சபையின் முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியில்... பெற்றோர், நலன்விரும்பிகள், ஆசிரியர் உட்பட பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒருமித்த பங்கேற்புடன் 2026ம் ஆண்டுக்கான பொங்கல் விழா
மற்றும்
மலர்ந்துள்ள புதிய வருடத்தில் புதிதாக இணைந்துள்ள புதுமுக மழலைகள் உள்ளடங்கலாக அனைத்து மாணவர்களையும் புதிய கல்வியாண்டில் வரவேற்கும் "எனது 1வது பாடசாலை நாள்" (My First Day School" நிகழ்வும் ஓமந்தை முன்பள்ளியில் 21.01.2026 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது..

எம் சபையின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான சிறந்த பின்னூட்டம்

எம் சபையின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான சிறந்த பின்னூட்டம் ... http://<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fak.farm.522%2Fposts%2Fpfbid031wxmXa3sn2QT9WqzJE4P6nhSb2wgHKUJNtrdqQmC4m6waQ1fy5y8BJbsMv3BsNtHl&show_text=true&width=500" width="500" height="570" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> Continue reading "எம் சபையின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான சிறந்த பின்னூட்டம்"

வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் திறப்புவிழா

உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வறுமை மட்டத்தை குறைத்தல் எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம்,பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம்,ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் பேயாடிகூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட வாகன சுத்திகரிப்புநிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன 18.08.2023 பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.

 

இந்த வாகனசுத்திகரிப்பு நிலையம் மற்றும் இயந்திரவியல் முற்றம் ஆகியன உருவாக்கம் பெறுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த மறைந்த எமது சபையின் முன்னாள் தவிசாளர் கௌரவ.துரைச்சாமி-நடராஜசிங்கம் அவர்களை இந்த நேரத்தில் நாம் நன்றிகளுடன் நினைவு கூருகின்றோம்.

 

அத்துடன் இந்த வாகன சுத்திகரிப்பு நிலைய செயற்றிட்டத்திற்கான நிதியீட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு உறுதுணையாக நின்ற இலங்கை உள்ளூராட்சி மன்ற இணையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சண்முகராஜா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.