அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் சபையின் நோக்கினை அடைந்திட ஆளுமையுடன் மக்கள் சேவையாற்றும் வீர மங்கையர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்…

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 24.02.2026

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான ஆதனவரி நடமாடும் சேவையானது செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை மதீனநகரில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நடமாடும் சேவையிலும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் போட்டி- 25.02.2026

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு 25.02.2026ம் திகதி கணேசபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் (மென்பந்து கிரிக்கெட்) போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வெற்றி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்கள், சந்திகள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளின் முன்பாக பொதுவாக இரவு மற்றும் சனநடமாற்றமற்ற வேளைகளில் திண்மக் கழிவுகளை (குப்பைகளை) கொண்டுவந்து வீசிச்செல்வதனால் பாரிய சூழல் மாசடைவுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Continue reading “சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை”

கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்…

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 19.02.2026 – 2ம் நாள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 2ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை அண்ணாநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இரு தினங்களாக நடைபெற்ற நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்
முதன்முறையாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 1ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று புதன்கிழமை (18.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறுகின்றது.
மேலும் நாளைய தினமும் (19.02.2026) அண்ணாநகர் பகுதியிலும் 2ம் நாளாக ஆதனவரி நடமாடும் சேவையானது காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறும்.
குறித்த நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரி படிவங்களை ( K Form) பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் ஆதனவரியை இம்மாதம் (மாசி மாதம்) 28 ஆம் திகதிக்கு முன் செலுத்துபவர்கள் தமது வரியில் 05% இனை கழிவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் .
எனவே ஆதன வரி செலுத்தும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் தங்களுடைய ஆதனங்களுக்கான வரியினை இன்றைய தினம் நடைபெறவுள்ள நடமாடும்ட சேவையில் நிலுவையின்றி செலுத்தி தாங்களும் பயனடைவதுடன், தங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்..
தவிசாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 16.12.2025

 

 

 

 

 

 

 

 

16.12.2025ம் திகதி இடம்பெற்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 7வது சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களின் பார்வைக்காக..

சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியில் கற்கும் சிறார்கள் வர்ணங்களை அறிந்துகொள்ளும் வகையில் இணைப்பாடவிதானத்துடன் கூடிய கற்றல் நடவடிக்கையாக “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு” நடைபெற்றது.

Continue reading “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி”

எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது நிதி வெளிப்படைத்தன்மை செயல்பாட்டிற்காக இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் இலங்கை அரச நிதி கணக்கறிஞர்கள் சங்கத்தினால் BMICH இல் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்ட “Certificate of Compliance” விருதினை தனதாக்கிக்கொண்டது.

Continue reading “எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024″

சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளிஎமது பிரதேச சபையின் முன்பள்ளியான Continue reading “சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளி”

பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026 ஓமந்தை முன்பள்ளி

பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026
ஓமந்தை முன்பள்ளி
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஓமந்தை முன்பள்ளியிலிருந்து தரம் 01க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழாவானது 2026.01.12ம் திகதி ஓமந்தை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் சபையின் கௌரவ தவிசாளர் திரு. பா. பாலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Continue reading “பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026 ஓமந்தை முன்பள்ளி”

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 18.11.2025

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 18.11.2025

Continue reading “சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 18.11.2025”

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

 

 

 

 

 

 

 

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Continue reading “அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்”

பொலித்தீனை மூலப்பொருளாகக்கொண்ட உணவு உறைகளின் (Lunch Sheet) உற்பத்தி மற்றும் பாவனையை வடமாகாணத்தில் தடை செய்தல்.

பொலித்தீனை மூலப்பொருளாகக்கொண்ட உணவு உறைகளின் (Lunch Sheet) உற்பத்தி மற்றும் பாவனையை வடமாகாணத்தில் தடை செய்தல் – 01.01.2026 (சுற்றறிக்கை)

Continue reading “பொலித்தீனை மூலப்பொருளாகக்கொண்ட உணவு உறைகளின் (Lunch Sheet) உற்பத்தி மற்றும் பாவனையை வடமாகாணத்தில் தடை செய்தல்.”

2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.

2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.

2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள் வழமைபோலவே இவ்வருடமும் எமது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

Continue reading “2026ம் ஆண்டுக்கான முதலாவது அலுவலக நடவடிக்கைகள்.”

நூலகங்களுக்கு புதிய நூல்கள் கொள்வனவு – 2025

“SDG இலக்கு 04 – தரமான கல்வி”
(யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்)
எமது சபை எல்லைக்குட்பட்ட மாணவர்களுக்கான மற்றும் வாசகர்களுக்கான அறிவுத்தேடலுக்கு உதவிடும் வகையிலும் பாடசாலைக் கற்றல் மேம்பாடு மற்றும் போட்டிப் பரீட்சைக்கான சித்திக்கு சொந்தமாக நூல்களை வாங்கிப் பயன்படுத்த முடியாத மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டியாகவும் அமைந்துள்ள நூல்கள் சுமார் 480 இவ்வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்டு எமது நூலகங்களான
என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன..
இவற்றுள் ..
பாலர் வகுப்பு நூல்கள்
புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டிகள்
போட்டிப்பரீட்சை வழிகாட்டிகள்
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை கடந்த கால வினாத்தாள் தொகுப்பு
வரலாற்று நூல்கள் – என பலவிதமான நூல்கள் உள்ளடக்குகின்றன.
இவற்றை நூலகங்களுக்கு வருகைதந்து வாசித்து மற்றும் இரவாக பெற்றுச்சென்று பயன்பெற்றுக்கொள்ள முடியும்.

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.20- சிதம்பரபுரம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சிதம்பரபுரம் பகுதியில் 2025.12.20அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.20- சிதம்பரபுரம்”

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.19- தரணிக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான சாளம்பைக்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.19அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.19- தரணிக்குளம்”

அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.19- பான்சின்னக்குளம்

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான பான்சின்னக்குளம் பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கூடியவாறு பள்ளமாக இருந்த பகுதிகள் 2025.12.19 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் மண் நிரப்பப்பட்டு சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வீதி புனரமைப்பு மற்றும் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

Continue reading “அனர்த்தத்தின் பின்னரான வீதி புனரமைப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.19- பான்சின்னக்குளம்”