
எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியின் சிறார்கள் சுற்றாடலில் இருந்தும் தங்களுடைய கைவண்ணங்களாலும் கற்றறியும் வகையிலான மஞ்சள் நாள் கொண்டாட்டம்12.06.2026 முன்பள்ளி ஆசிரியரின் வழிகாட்டலில் மழலைகளால் மேற்கொள்ளப்பட்டது.
எமது சபையின் 2026ம் ஆண்டிற்கான புதுவருட நிகழ்வானது 06.05.2026 புதன் கிழமை வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்தில் எமது சபையின் கௌரவ தலைவர் தலைமையில் கௌரவ உறுப்பினர்கள்,செயலாளர்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடனும் பங்குபற்றுதலுடனும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களை நடத்துவோருக்கான கலந்துரையாடல் 24.04.2026ம் திகதி கௌரவ தலைவர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன்


எமது சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.உணவகங்களில் பொலித்தீன் பாவனையினை முற்றாக தடை செய்வதும் அதற்கான மாற்று வழிகளினை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும்.
அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து கொள்ளும் வகையில்
நீரின் முக்கியத்துவம்,
நீரைப் பாதுகாப்போம்,
நீர் கிடைக்கும் வழிமுறைகள்,
நீரில் விளையாட்டு என்பனவற்றை விளக்கும்
"நீல நிறத்தைச் சுட்டும் நாள்" Blue Day இன்று எமது ஓமந்தை முன்பள்ளியில் கொண்டாடப்பட்ட து.

அனைவரையும் மழலைகளின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் சந்தைக்கு வருக வருக என வரவேற்கின்றோம்
எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு 25.02.2026ம் திகதி கணேசபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் (மென்பந்து கிரிக்கெட்) போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வெற்றி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.