“நீல நிறத்தைச் சுட்டும் நாள்” – “Blue day” 02.04.2026

மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும்.
அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து கொள்ளும் வகையில்
நீரின் முக்கியத்துவம்,
நீரைப் பாதுகாப்போம்,
நீர் கிடைக்கும் வழிமுறைகள்,
நீரில் விளையாட்டு என்பனவற்றை விளக்கும்
“நீல நிறத்தைச் சுட்டும் நாள்” Blue Day இன்று எமது ஓமந்தை முன்பள்ளியில் கொண்டாடப்பட்ட து.

ஓமந்தை முன்பள்ளி மழலைகளின் மாதிரி சந்தை நிகழ்வு 2026

 

 

 

 

 

 

 

16.03.2026 அன்றைய தினம் நடைபெற்ற எமது ஓமந்தை முன்பள்ளி மழலைகளின் மாதிரி சந்தை நிகழ்வு 2026 பதிவுகள்

இப்தார் நிகழ்வு

இன்றைய தினம் எமது பிரதேச சபையில் கௌரவ தலைவர் தலைமையில் நடைபெற்ற இப்தார் வவுனியா பிரதேச செயலாளர் திரு.இ.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் நிகழ்வின் பதிவுகள் சில..

செயலாளர் திருமதி.தெர்ஜனா சுகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

எமது பிரதேச சபையின் செயலாளர் திருமதி.தெர்ஜனா சுகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்..

தாக சாந்தி நிகழ்வு – 12.03.2026

கிறிஸ்தவ மதத்தவர் தவக்காலத்தின் போது மன்னார் மற்றும் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் கோமரசன்குளம் கல்வாரி புனிதத் தலம் நோக்கி ஆண்டுதோறும் பாத யாத்திரையாக செல்வதைப்போல, இவ்வருடமும் மன்னார் பிரதான வீதியினூடாக வருகைதந்த விசேட தினங்களில் ஒன்றாகிய 12.03.2026 வியாழக்கிழமையன்று பக்தர்களுக்காக எமது சபையின் கௌரவ தலைவர் அவர்களுடைய தலைமையில் கௌரவ உறுப்பினர்கள் , உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பம்பைமடு பகுதியில் “தாகசாந்தி நிலையம்” அமைக்கப்பட்டு தாக சாந்தி நிகழ்வு நடைபெற்றது…
நிகழ்வின் பதிவுகள் சில

ஓமந்தை முன்பள்ளி மழலைகளின் மாதிரி சந்தை நிகழ்வு 2026 – அழைப்பிதழ்

 

 

 

 

 

 

 

 

 

அனைவரையும் மழலைகளின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் சந்தைக்கு வருக வருக என வரவேற்கின்றோம்

அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் சபையின் நோக்கினை அடைந்திட ஆளுமையுடன் மக்கள் சேவையாற்றும் வீர மங்கையர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்…

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 24.02.2026

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான ஆதனவரி நடமாடும் சேவையானது செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை மதீனநகரில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நடமாடும் சேவையிலும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் போட்டி- 25.02.2026

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு 25.02.2026ம் திகதி கணேசபுரம் விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான மென்பந்துச்சுற்றுப் (மென்பந்து கிரிக்கெட்) போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வெற்றி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வீதியோரங்கள், சந்திகள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளின் முன்பாக பொதுவாக இரவு மற்றும் சனநடமாற்றமற்ற வேளைகளில் திண்மக் கழிவுகளை (குப்பைகளை) கொண்டுவந்து வீசிச்செல்வதனால் பாரிய சூழல் மாசடைவுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Continue reading “சட்டவிரோதமான கழிவகற்றலை கட்டுப்படுத்த எமது சபையினால் முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கை”

கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

எமது சபையின் கௌரவ தவிசாளருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்…

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 19.02.2026 – 2ம் நாள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 2ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை அண்ணாநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இரு தினங்களாக நடைபெற்ற நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்
முதன்முறையாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 1ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று புதன்கிழமை (18.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறுகின்றது.
மேலும் நாளைய தினமும் (19.02.2026) அண்ணாநகர் பகுதியிலும் 2ம் நாளாக ஆதனவரி நடமாடும் சேவையானது காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறும்.
குறித்த நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரி படிவங்களை ( K Form) பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் ஆதனவரியை இம்மாதம் (மாசி மாதம்) 28 ஆம் திகதிக்கு முன் செலுத்துபவர்கள் தமது வரியில் 05% இனை கழிவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் .
எனவே ஆதன வரி செலுத்தும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் தங்களுடைய ஆதனங்களுக்கான வரியினை இன்றைய தினம் நடைபெறவுள்ள நடமாடும்ட சேவையில் நிலுவையின்றி செலுத்தி தாங்களும் பயனடைவதுடன், தங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்..
தவிசாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 16.12.2025

 

 

 

 

 

 

 

 

16.12.2025ம் திகதி இடம்பெற்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 7வது சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுமக்களின் பார்வைக்காக..

சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

எமது பிரதேச சபை முன்பள்ளியான ஓமந்தை முன்பள்ளியில் கற்கும் சிறார்கள் வர்ணங்களை அறிந்துகொள்ளும் வகையில் இணைப்பாடவிதானத்துடன் கூடிய கற்றல் நடவடிக்கையாக “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு” நடைபெற்றது.

Continue reading “சிவப்பு நிறத்தை அறிதல் செயற்பாடு – ஓமந்தை முன்பள்ளி”

எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024

எமது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது நிதி வெளிப்படைத்தன்மை செயல்பாட்டிற்காக இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் இலங்கை அரச நிதி கணக்கறிஞர்கள் சங்கத்தினால் BMICH இல் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழாவில், தேசிய மட்ட “Certificate of Compliance” விருதினை தனதாக்கிக்கொண்டது.

Continue reading “எமது சபைக்கான தேசிய மட்ட விருது “Certificate of Compliance” – 2024″

சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளி

 

 

 

 

 

 

 

சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளிஎமது பிரதேச சபையின் முன்பள்ளியான Continue reading “சுதந்திர தின கொண்டாட்டம் – ஓமந்தை முன்பள்ளி”

பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026 ஓமந்தை முன்பள்ளி

பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026
ஓமந்தை முன்பள்ளி
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஓமந்தை முன்பள்ளியிலிருந்து தரம் 01க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழாவானது 2026.01.12ம் திகதி ஓமந்தை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் சபையின் கௌரவ தவிசாளர் திரு. பா. பாலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Continue reading “பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு விழா – 2026 ஓமந்தை முன்பள்ளி”

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 18.11.2025

சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 18.11.2025

Continue reading “சபைக்கூட்டத் தீர்மானங்கள் – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை- 18.11.2025”

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

 

 

 

 

 

 

 

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் Continue reading “அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்”