
உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கிவரும் நூலகங்களில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற வருகின்ற தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சிகளில், மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான விடயங்களை அதிகம் உள்ளடக்குகின்ற நூலகங்கள் மற்றும் அவற்றின் நூலகர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவவனது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Continue reading “தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025”

எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஈச்சங்குளம் மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக வீதிகளில் நடமாடி மக்களுக்கு விபத்துக்கள் மூலம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்ற கால்நடைகளை பிடித்தடைத்து உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் செயற்பாடு எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் 16.11.2025 அன்று நடைபெற்றது.

