பெண் சாதனையாளருக்கான கௌரவிப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்குவிப்புத்தொகை வழங்கும் நிகழ்வு -30.04.2026

2026ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடமிருந்து பெண்சாதனையாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்2026ம் ஆண்டு சபையின் பாதீட்டில் 2024/2025 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்குதெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் ஒருவர் என்ற வீதத்தில் பொருளாதார உதவி தேவைப்படும்13 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 5000.00 என்ற அடிப்படையில் 04 மாதங்களுக்கான கொடுப்பனவு தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரச அதிபர் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய உ.உ.ஆணையாளரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிகையலங்கார நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் 26.04.2026

எமது சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிகையலங்கார நிலையங்களை நடத்துவோருக்கானகலந்துரையாடல் 26.04.2026ம் திகதி எமது சபையின் கௌரவ தலைவர் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டு ள் சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியநடைமுறைகள் பற்றிய தெளிவூட்டலை உரிமையாளர்களுக்கு வழங்கியிருந்தனர்    

உணவக உரிமையாளர்களுடனான கலந்துரையாடல்- 24.04.2026

எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களை நடத்துவோருக்கான கலந்துரையாடல் 24.04.2026ம் திகதி கௌரவ தலைவர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்குபற்றுதலுடன் எமது சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.உணவகங்களில் பொலித்தீன் பாவனையினை முற்றாக தடை செய்வதும் அதற்கான மாற்று வழிகளினை பயன்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

உணவகங்களுக்கு பரிசோதனை நிமித்தம் அதிரடியாக விஜயம் -09.04.2026

உணவகங்களுக்கு பரிசோதனை நிமித்தம் அதிரடியாக விஜயம் -09.04.2026

 
எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்குகின்ற உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க 09.04.2026 எமது சபையின் கௌரவ தவிசாளர் தலைமையிலான சிரேஸ்ட பொது சகாதார பரிசோதகர் உட்பட பொது சகாதார பரிசோதகர்கள் குழுவினரால் பூவரசங்குளம்  பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதாரமற்ற மு றையில்இயங்கி வந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“நீல நிறத்தைச் சுட்டும் நாள்” – “Blue day” 02.04.2026

மாணவர்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்த கல்விமுறை மிகவும் பயனுடையதாக அமையும்.
அந்தவகையில் சிறார்கள் சிறு வயதிலே நிறங்களை அறிந்துகொள்ள, அதிலும் விளையாட்டுகளுடன் இணைந்து நிறங்களை அறிந்து கொள்ளும் வகையில்
நீரின் முக்கியத்துவம்,
நீரைப் பாதுகாப்போம்,
நீர் கிடைக்கும் வழிமுறைகள்,
நீரில் விளையாட்டு என்பனவற்றை விளக்கும்
"நீல நிறத்தைச் சுட்டும் நாள்" Blue Day இன்று எமது ஓமந்தை முன்பள்ளியில் கொண்டாடப்பட்ட து.