
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான ஆதனவரி நடமாடும் சேவையானது செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை மதீனநகரில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் குறித்த நடமாடும் சேவையிலும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரியை செலுத்த மிக ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்..

