2026ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடமிருந்து பெண்சாதனையாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்2026ம் ஆண்டு சபையின் பாதீட்டில் 2024/2025 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்குதெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் ஒருவர் என்ற வீதத்தில் பொருளாதார உதவி தேவைப்படும்13 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு 5000.00 என்ற அடிப்படையில் 04 மாதங்களுக்கான கொடுப்பனவு தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. எமது சபையின் கௌரவ தலைவரின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரச அதிபர் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிராந்திய உ.உ.ஆணையாளரும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

