ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்

ஆதன வரி / சோலைவரி நடமாடும் சேவை – மகாறம்பைக்குளம் 18.02.2026 – 1ம் நாள்
முதன்முறையாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் கிராமத்திற்கான 1ம் நாள் ஆதனவரி நடமாடும் சேவையானது இன்று புதன்கிழமை (18.02.2026) காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறுகின்றது.
மேலும் நாளைய தினமும் (19.02.2026) அண்ணாநகர் பகுதியிலும் 2ம் நாளாக ஆதனவரி நடமாடும் சேவையானது காலை 9.00 தொடக்கம் பி.ப 3.00 மணிவரை நடைபெறும்.
குறித்த நடமாடும் சேவையில் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் 2026 ஆம் ஆண்டுக்கான ஆதனவரி படிவங்களை ( K Form) பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் ஆதனவரியை இம்மாதம் (மாசி மாதம்) 28 ஆம் திகதிக்கு முன் செலுத்துபவர்கள் தமது வரியில் 05% இனை கழிவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் .
எனவே ஆதன வரி செலுத்தும் மகாறம்பைக்குளம் கிராம மக்கள் தங்களுடைய ஆதனங்களுக்கான வரியினை இன்றைய தினம் நடைபெறவுள்ள நடமாடும்ட சேவையில் நிலுவையின்றி செலுத்தி தாங்களும் பயனடைவதுடன், தங்களுடைய பிரதேச அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்..
தவிசாளர்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை
இன்றைய நிகழ்வின் பதிவுகள் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *