
வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.09 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.09 – மரக்காரம்பளை மற்றும் நெளுக்குளம்”

வெள்ள அனர்த்த பாதிப்புக்குள்ளான கூமாங்குளம் பகுதியில் வெள்ள நீர் இயல்பாக வடிந்தோட தடையாக இருந்த பகுதிகள் 2025.12.08 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களினால் சீரமைப்பு செய்யப்பட்டதுடன் வடிகால்
சுத்திகரிப்பு பணிகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
Continue reading “அனர்த்தத்தின் பின்னரான சுத்திகரிப்பு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகள் – 2025.12.08 – கூமாங்குளம்”
உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கிவரும் நூலகங்களில் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற வருகின்ற தேசிய வாசிப்புமாத நிகழ்ச்சிகளில், மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான விடயங்களை அதிகம் உள்ளடக்குகின்ற நூலகங்கள் மற்றும் அவற்றின் நூலகர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழாவவனது தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Continue reading “தேசிய வாசிப்பு மாதம் விருது வழங்கும் விழா – 2025”
எமது பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சனசமூக நிலையங்களில் தெரிவுசெய்யப்பட்ட 36 சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு காசோலை வழங்கும் வைபவம் சபையின் கௌரவ தலைவர் தலைமையில் 07.11.2025 அன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் நடைபெற்றது.
Continue reading “சனசமூக நிலையங்களுக்கான மானியக் கொடுப்பனவு வழங்கும் வைபவம்”
வன வளப் பாதுகாப்பு திணைக்கள வவுனியா மாவட்ட உத்தியோகத்தர்களால் 28.10.2025 அன்று எமது சபையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் …
Continue reading “வன வளப் பாதுகாப்பு தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு”

முழு நாடுமே ஒன்றாக ” போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொழும்பு சுகததாஸ உள்ளரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பான சம நேரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும்
Continue reading “போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நடவடிக்கைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு”
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வரைவு பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக எமது முகநூல் பக்கத்தில் பார்வைக்காக பதிவிடப்பட்டுள்ளது.
Continue reading “வரவு செலவுத்திட்ட வரைவு – வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை”
2026ம் ஆண்டு வழங்குவதற்கான நெளுக்குளம் மாட்டிறைச்சிக்கடை, நெளுக்குளம் கோழியிறைச்சிக்கடை, நெளுக்குளம் மீன்கடை, சாளம்பைக்குளம் மாட்டிறைச்சிக்கடை, சாளம்பைக்குளம் கோழியிறைச்சிக்கடை, சாளம்பைக்குளம் மீன்கடைஈ சாளம்பைக்குளம் கடை , கோமரசங்குளம் மாட்டிறைச்சிக்கடை, குளுமாட்டுச்சந்தி மீன் கடைத்தொகுதி, ஓமந்தை உணவகம் மற்றும் ஓமந்தை நீர் சுத்திகரிப்பு நிலையம் –
ஆகியனவற்றை 2026ம் ஆண்டு நடாத்துவதற்கான கேள்விப்பத்திரங்கள் 21.10.2025 நண்பகல் 2.00 மணிக்கு கேள்விகள் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் திறக்கப்பட்டது.
Continue reading “கேள்விப் பத்திரங்கள் திறத்தல் (Tender Opening)”
SDG Goal No 13 – வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்”
Continue reading “அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடு”

SDG Goal No 13 – வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல் Continue reading “அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடு”
2023 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி பூஜை நிகழ்வுகள் 23.10.2023 அன்று எமது சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்பூஜையில் எமது சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.








கௌரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்துதல் எனும் அபிவிருத்தி இலக்கிற்கமைய எமது சபையினால் தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்ற அவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான அழகிய ஆக்கங்கள் மற்றும் எமது அறிவிற்கு ஆதாரமான புத்தகங்கள் ஆகியன கண்காட்சிக்காக வைக்கப்படன.
இக்கண்காட்சி 18.10.2023 மற்றும் 19.10.2023 ஆகிய இருதினங்களும் எமது சபையின் கூமாங்குளம் பொதுநூலகத்தில் நடைபெற்றது.
கண்காட்சியினை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.






எமது சபையால் 2022 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களிலிருந்து உலகவங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின்(LDSP) கீழ் 2023/2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான முதலாவது கூட்டம் 25.09.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபா மண்டபத்தில் சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு வருகைதர தவறியோர் எதிர்வரும் 30.09.3023 பிற்பகல் 2.00 மணிக்கு எமது சபை சபாமண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

எமது சபையால் வருடாவருடம் கொண்டாடப்படும் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 23.09.2023 சனிக்கிழமை எமது சபைக்குட்பட்ட முன்பள்ளிகள்இகனிஷ்ட மற்றும் உயர்தர பாடசாலை மாணவர்களுக்கிடையில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் போட்டிகள் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றன.
அந்த வகையில்
1)நிறந்தீட்டல் போட்டி
2)ஆத்திசூடி கூறல் போட்டி
3)வாசிப்புப்போட்டி
4)கவிதைப்போட்டி
5)கட்டுரைப்போட்டி
6)பொதுஅறிவுப்போட்டி
ஆகிய போட்டிகள் எம்மால் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
இந்த வாசிப்புமாத போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



வருடா வருடம் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படும் தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு எமது சபையினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை சேகரித்து சுற்றாடலை தூய்மையாக்கும் சிரமதானப்பணியானது 21.09.2023 அன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்த தூய்மையாக்கும்பணியில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்இமத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள்இ வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலைவாணி சனசமூக நிலையத்தினர் கைகோர்த்திருந்தனர்.
இவர்கள் இந்த தூய்மையாக்கல் பணிக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பிற்கு சபை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
அந்த வகையில் இன்றைய தினம் தாண்டிக்குளம் சந்தி தொடக்கம் ஓமந்தை பொலிஸ்நிலையம் வரையுள்ள யு9 பிரதான வீதியின் இருபக்கமும் மேற்படி பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகள் எமது சபை கழிவகற்றல் வாகனங்களில் தரம்பிரித்து சேகரிக்கப்பட்டன.
நாமும் இவ்வாறு கழிவுகளை தரம்பிரித்து சேகரிப்பதன் மூலம் சூழலை மாசுபடுத்தும் கழிவுகளை சூழலுக்கு மாசினை ஏற்படுத்தாத வகையில் மீள்சுழற்சிக்கு உள்ளாக்க முடியும்.
எனவே நாமும் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் உக்காத கழிவுகளை முறையான விதத்தில் சேகரித்து தூய்மையான சுற்றுப்புற சூழலை உருவாக்கி எமது எதிர்கால சந்ததிக்கு முன்னோடியாக திகழ்வோம்.



உள்ளூராட்சிமன்றங்களுக்கான செயற்றிறன் மதிப்பீடு 05.09.2023 எமது சபை பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த மதிப்பீட்டில் சபையின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது.




தேசிய வாசிப்புமாத போட்டிகளின் வரிசையில் 03.09.2023 அன்று எமது சபையின் கீழ் இயங்கும் கூமாங்குளம் பொதுநூலகத்தில் கூமாங்குளம் பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அனுசரணையில் எமது சபையால் பாடசாலை மாணவர்களுக்கான “ஓவியப்போட்டி”நடாத்தப்பட்டது.
இப்போட்டியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



